நடுவீதியில் இசைக்கருவிகளுடன் இறங்கிய இளைஞர், யுவதிகள்! கொழும்பில் வேகமெடுக்கும் போராட்டம்
அரசாங்கத்தை பதவி விலகுமாறு தெரிவித்து கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக இன்றைய தினம் ஆர்ப்பாட்ட பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பேரணியானது காலிமுகத்திடல் நோக்கி செல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் காணாமல் போனோரை தேடியறியும் குழு, நவ சம சமாஜ கட்சி, சமசமாஜ ஒற்றுமை குழு, இலங்கை வங்கி ஊழியர் சங்கம் உட்பட இளைஞர் யுவதிகளும் இணைந்துள்ளனர்.
மேலும், இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்டுள்ள இளைஞர் யுவதிகள் பல்வேறு வாத்தியக்கருவிகளை இசைத்த வண்ணம், அரசாங்கத்திற்கு எதிராக பாடல் பாடியபடி காலிமுகத்திடலை நோக்கி பேரணியை முன்னெடுத்துள்ளனர்.
மேலும், கொழும்பின் பிரதான இடங்களில் கடைகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் வர்த்தகர்கள், ஊழியர்கள் என அனைவரும் வீதிக்கு இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.