சிறிலங்காவிற்கான வெளிநாட்டு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்!
வெளிநாட்டு முதலீட்டு வாய்ப்புக்களை உள்வாங்கும் முயற்சியாக, இலங்கைக்கான வெளிநாட்டு பிரதிநிதிகளை நியமிக்கும் திட்டத்தின் கீழ் வட பகுதியை சேர்ந்த தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அந்தவகையில், யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகவும் தற்போது பிரித்தானியாவில் வசிப்பவருமான கண்ணையா கஜன் எனப்படும் தமிழரே ஐக்கிய இராச்சிய பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கான நியமனக் கடிதத்தை முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம வழங்கி வைத்துள்ளார்.
கண்ணையா கஜன்
எரிசக்தி, விவசாயம், நகர்ப்புற அபிவிருத்தி, கனிம வளங்கள் போன்றவற்றிற்கான ஐக்கிய இராச்சியத்திலிருந்து முதலீட்டாளர்களை உள்ளீர்த்து ஒருங்கிணைக்கும் பொறுப்பை கண்ணையா கஜன் வகிப்பார்.
சஃபோல்க் பல்கலைக்கழகத்தில் வணிக முகாமைத்துவத்தில் முதுமாணி பட்டம் பெற்றுள்ள இவர், பிரித்தானியாவில் உள்ள பல வணிகங்களின் உரிமையாளராக இருக்கின்றார்.
இவர் திட்ட முகாமையாளராகவும் பல்வேறு நிறுவனங்களின் பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார்.
கண்ணையா கஜன் பிரித்தானியாவிலுள்ள லோட்டஸ் வில்லேஜ் ஹோம் கேர் நிறுவனத்தின் ஸ்தாபகரும் பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும் உள்ளார்.
