ஆசிரியர் இடமாற்ற முறைகேடுகள் - ஆளுநர் அலுவலகத்தினை முற்றுகை: எச்சரிக்கும் சங்கம்
ஆசிரியர் இடமாற்ற கொள்கையில் முறைகேடுகள் திருத்தபடாவிடின் போராட்டத்தில் குதிக்க உள்ளதாக இலங்கை தாய் மொழி ஆசிரியர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், எதிர்வரும் 4ஆம் திகதி காலை 10.00 மணியளவில் ஆளுநர் அலுவலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை தாய் மொழி ஆசிரியர் சங்கத்தின் கலந்துரையாடல் யாழ் மாவட்டத்தில் இடம்பெற்றது .
எச்சரிக்கை
குறித்த கலந்துரையாடலில் இலங்கை தாய் மொழி ஆசிரியர் சங்கத்தின் நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் கல்வி திணைக்களத்தின் இடமாற்ற கொள்கையால் பாதிக்கப்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
வெளி மாவட்டத்தில் ஆசிரியர்கள் பணியாற்றுவதனை தடுப்பது சங்கத்தின் நோக்கமல்ல எனவும் ஆசிரியர்கள் ஏமாற்றபடாது வெளிமாவட்டங்களில் அவர்கள் ஆற்றவேண்டிய காலத்தை வரையறுக்குமாறும் குறித்த கூட்டத்தில் தொழிற்சங்க தீர்மானம் தொடர்பில் பிரஸ்தாபிக்கபட்டுள்ளது.
இதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு சங்கத்தினர் கருத்து தெரிவித்ததுடன் மேற்படி போராட்டம் குறித்தும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
