உலகிற்கே எடுத்துக்காட்டாக மாறிய இலங்கை - சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை தகவல்
International Monetary Fund
Sri Lanka Economic Crisis
Indonesia
Economy of Sri Lanka
By Vanan
இலங்கை ஒரு எச்சரிக்கை அறிகுறி
அதிக கடன்கள் மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட கொள்கைகளைக் கொண்ட நாடுகளுக்கு இலங்கை ஒரு எச்சரிக்கை அறிகுறியாகும் என சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா தெரிவித்துள்ளார்.
நேற்று இந்தோனேசியாவில் நடைபெற்ற ஜி20 நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களுடனான கூட்டத்தில் உரையாற்றும் போது ஜோர்ஜியேவா இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
உக்ரைன் யுத்தத்தின் தாக்கம்
உக்ரைன் யுத்தத்துடன், உலகில் உணவுகள் மற்றும் பொருட்களின் விலைகளில் பாரிய தாக்கம் ஏற்பட்டுள்ளதுடன், பொருளாதார நடவடிக்கைகளுக்கு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.
அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் இந்த நிலைமைக்கு முகங்கொடுப்பதற்காக, கொள்கை ரீதியான தலையீடுகள் அவசியமாகும்.
இந்த நிலைமைக்கு இலங்கையை ஓர் அடையாளமாக அவதானிக்க வேண்டும் என இந்தக் கூட்டத்தில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு 3 நாட்கள் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி