தென்னிலங்கையில் களேபரம்..! அதிகரிக்கும் பதற்ற நிலை - காவல்துறை எதிர் தாக்குதல் (காணொளி)
இரண்டாம் இணைப்பு
சற்றுமுன் உலக வர்த்தக மையத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது காவல்துறையால் கண்ணீர்புகைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அரச தலைவர் மாளிகையை நோக்கி ஆர்ப்பாட்டப் பேரணியை செல்ல விடாமல் தடுப்பதற்காக கொழும்பு லோட்டஸ் வீதியில் அதிக எண்ணிக்கையிலான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதலாம் இணைப்பு
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவர் தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி கொழும்பு - காலிமுகத் திடலில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் இன்றுடன் 50வது நாளை நிறைவு செய்துள்ளது.
இதனை மையப்படுத்தி இன்று காலிமுகத்திடல் பகுதியில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்ட நிலையில் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது.
ஆயிரக்கணக்கானவர்கள் இதில் கலந்துகொண்டு அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பி வந்த நிலையிலேயே பதற்ற நிலை ஏற்பட்டது.
30 ஆண்டு கால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தமையால் சிங்கள மக்கள் மத்தியில் அசைக்க முடியாத நம்பிக்கையை பெற்றிருந்த ராஜபக்சர்களுக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டமானது உள்ளூரில் மட்டுமன்றி சர்வதேசத்தின் கவனத்தையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.