இலங்கையில் இக்கட்டான நிலை - இந்தியாவில் இடம்பெற்ற உயர்மட்ட கலந்துரையாடல்
இலங்கையில் பொருளாதார நெருக்கடி
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியான நிலைமையில் இந்தியாவின் வகிபாகம் தொடர்பாக இந்திய நாடாளுமன்ற ஆலோசனைக் குழுக் கூட்டம் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் தலைமையில் இன்றையதினம் நடைபெற்றது.
இந்த இக்கட்டான நேரத்தில் இந்தியா,இலங்கையுடன் நிற்க வேண்டியதன் அவசியத்திற்கு ஏகமனதாக ஆதரவு இருப்பதாகக் கூறிய அவர், பல்வேறு விவகாரங்கள் மற்றும் இந்தியாவின் பங்கு குறித்து கலந்துரையாடல் நல்லபடியாக நடத்தப்பட்டது என தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
Chaired a Parliamentary Consultative Committee meeting on the situation in Sri Lanka.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) June 18, 2022
A good discussion held in a positive atmosphere on various issues and India’s role.
Unanimous support on the need to stand with our neighbor in this difficult time. pic.twitter.com/MG46ijpXw9

