மகிந்த தரப்பை தோற்கடித்த மைத்திரி அணியினர்
mahinda
election
maithiri
By Sumithiran
ஹொரணையில் உள்ள மில்லனியா கூட்டுறவுச் சங்கத்திற்கான பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கான தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதிநிதிகள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை தோற்கடித்துள்ளனர்.
சுதந்திரக்கட்சி, தலைவர் மற்றும் உப தலைவர் உட்பட நான்கு ஆசனங்களை வென்றுள்ளது, பொதுஜன பெரமுனவுக்கு மூன்று ஆசனங்கள் மட்டுமே கிடைத்துள்ளன.
அண்மைய நாட்களாக மைத்திரி தலைமையிலான சுதந்திரக்கட்சிக்கும் ஆளும் தரப்பின் பொதுஜன பெரமுனவுக்கும் இடையே முறுகல் நிலை வலுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.