எதிர்க்கட்சிகளின் கலந்துரையாடலில் பங்கேற்கப் போவதில்லை : மொட்டுக்கட்சி அதிரடி அறிவிப்பு
உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக எதிர்க்கட்சிகளுக்கிடையில் நடைபெறவுள்ள கலந்துரையாடலில் சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பங்கேற்கப் போவதில்லை என தெரிவித்துள்ளது.
தேசிய மக்கள் சக்திக்கு (NPP) பெரும்பான்மை இல்லாத மாநகர சபைகள், நகர சபைகள் மற்றும் பிரதேச சபைகள் உட்பட அனைத்து உள்ளூராட்சி சபைகளிலும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக குறித்த கலந்துரையாடல் இன்று (15) நடைபெறவுள்ளது.
மாநகர சபைகள், நகர சபைகள் மற்றும் பிரதேச சபைகள் உட்பட அனைத்து உள்ளூராட்சி சபைகளிலும் ஆட்சியைக் கைப்பற்ற எதிர்த்தரப்பு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நேற்று (14) உடன்பாட்டுக்கு வந்திருந்தனர்.
முழுமையான ஆதரவு
அதன்படி, இன்று பிற்பகல் கட்சிகளின் பொதுச் செயலாளர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் நடைபெற உள்ளது.
எனினும், இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்காவிட்டாலும், உள்ளூராட்சி சபைகளை அமைப்பதற்கான முழுமையான ஆதரவை வழங்குவதாக சிறிலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி சபைகளின் அதிகாரத்தை நிறுவும் போது எந்த அரசியல் கட்சியுடனும் கூட்டணி அமைக்க எதிர்பார்க்கவில்லை என்றும் சிறிலங்கா பொதுஜன பெரமுன அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
