திருமலையில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு

Sri Lankan Tamils Trincomalee Mullivaikal Remembrance Day Sri Lanka
By Raghav May 16, 2025 11:37 AM GMT
Report

புதிய இணைப்பு

திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி வேலூர் பகுதியில், மக்களின் பங்கேற்புடன் முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி வழங்கும் நிகழ்வுவொன்று இடம்பெற்றுள்ளது.

திருமலையில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு | Mullivaikkal Remembrance 2025 Trincomalee

குறித்த நிகழ்வு இன்றைய தினம் (16.05.2025) வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில், காணாமற்போனோரின் உறவுகள், கிராமப்புற மக்களும், சமூகச் செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டு தங்கள் துயர அனுபவங்களைப் பகிர்ந்துக்கொண்டனர்.

மேலும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வாழ்வுகளைப் பற்றி பேசினர். நிகழ்வு, சமூக நினைவாற்றலை பாதுகாத்து, இனநீக்கம், உயிரிழப்பு மற்றும் அடக்குமுறைகளுக்கு எதிரான மக்களின் எதிர்வினையாகவும் அமைந்தது.

இரண்டாம் இணைப்பு

முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை முன்னிட்டு வெருகல் - இலங்கைத்துறை முகத்துவாரம் பகுதியில் இன்று  (16) காலை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

வெருகல் -இலங்கைத்துறை முகத்துவாரம் பிரதேச மக்கள் குறித்த நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தனர்.

இதன்போது முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டதுடன் முள்ளிவாய்க்கால் சம்பவத்தில் உயிர் நீத்தவர்களுக்காக சுடரேற்றி, பூ தூவி நினைவஞ்சலியும் செலுத்தப்பட்டது.

முள்ளிவாய்க்கால் நினைவு தின நிகழ்வில் அதிகளவான பொதுமக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

திருமலையில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு | Mullivaikkal Remembrance 2025 Trincomalee

முதலாம் இணைப்பு

இறுதி யுத்தத்தில் உயிர் நீத்த உறவுகளை நினைவு கூரும் முகமாக திருகோணமலையில் (Trincomalee) முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு இன்றைய தினம் (15.05.2025) திருகோணமலை - 3ம் கட்டை சந்தியில் இடம்பெற்றுள்ளது.

மன்னாரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு யாழ். பல்கலையால் கஞ்சி வழங்கும் நிகழ்வு

மன்னாரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு யாழ். பல்கலையால் கஞ்சி வழங்கும் நிகழ்வு

இறுதி யுத்தம் 

திருகோணமலை மாவட்டத்தின் இளையோர் ஒன்றிணைந்து இறுதி யுத்தத்தின் போது பொதுமக்கள் உணவாக உற்கொண்ட உப்புக் கஞ்சியை நினைவுபடுத்தும் வகையில் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

திருமலையில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு | Mullivaikkal Remembrance 2025 Trincomalee

இதன்போது கருத்து தெரிவித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் திருகோணமலை மாவட்டத் தலைவர், “இலங்கை அரசானது தமிழ் மக்கள் மீது முன்னெடுத்த அநீதியை அடுத்த சமூகத்திற்கு கடத்துவது அவசியமான ஒன்றாக காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார். 

மேலும் திருகோணமலை மாவட்டத்தினை சேர்ந்த ஒரு தமிழ் பிரதியமைச்சர் இனப்படுகொலை குறித்து இதுவரை கருத்து வெளியிடாமல் இருப்பது கவலையளிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். 

மூதூர்  - இறால்குழியில் முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி நிகழ்வு

கடந்த கால யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூர்வதோடு, அந்த காலத்தில் நிகழ்ந்த போர் குற்றங்களுக்கு நீதியை கோரும் நோக்குடன், ஒவ்வொரு ஆண்டும் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினால் (NECC) முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி நிகழ்வு ஒழுங்கமைக்கப்படுகிறது.

திருமலையில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு | Mullivaikkal Remembrance 2025 Trincomalee

இந்நிலையில், இன்று (2025 மே 15ஆம் ) திகதி, திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேசத்திலுள்ள இறால்குழி கிராமத்தில், காலை 9.00 மணியளவில், வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

நிகழ்வில் மொத்தம் 39 பொதுமக்கள் கலந்து கொண்டனர். துயரத்தை பகிர்ந்து கொள்ளும் நினைவு நிகழ்வாக மட்டுமல்லாது, நீதி தேடும் ஒரு சமூக அழைப்பாகவும் இந்நிகழ்வு அமைந்தது.

போர் முடிந்த பின்னரும் நீதி வழங்கப்படாதது குறித்த கேள்விகளை உயிருடன் வைத்திருக்க, இவ்வாறு மக்கள் ஒருங்கிணைந்து நினைவு நிகழ்வை அனுஷ்டிப்பது முக்கியமான நகர்வாகும். 

தோப்பூர் - பாட்டாளிபுரம்

முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை முன்னிட்டு திருகோணமலை, தோப்பூர் -பாட்டாளிபுரம் பகுதியில் இன்று வியாழக்கிழமை (15) மாலை முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி பரிமாறப்பட்டதோடு, நினைவஞ்சலி நிகழ்வும் இடம்பெற்றது.

திருமலையில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு | Mullivaikkal Remembrance 2025 Trincomalee 

இதனை சம்பூர் -ஆலங்குளம் மாவீரர்நாள் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு ஏற்பாடு செய்திருந்தது.

இதன்போது முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.மேலும் முள்ளிவாய்க்கால் சம்பவத்தில் உயிர் நீத்தவர்களுக்காக சுடரேற்றி நினைவஞ்சலிம் செலுத்தப்பட்டது.

முள்ளிவாய்க்கால் நினைவு தின நிகழ்வில் அதிகளவான பொதுமக்கள் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

திருமலையில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு | Mullivaikkal Remembrance 2025 Trincomalee

தமிழர் பகுதியில் சிவில் சமூக செயற்பாட்டாளர் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்

தமிழர் பகுதியில் சிவில் சமூக செயற்பாட்டாளர் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்

செம்மணியில் ஆரம்பமான அகழ்வுப் பணிகள்: ஊடகவியலாளர்களுக்கு தடை

செம்மணியில் ஆரம்பமான அகழ்வுப் பணிகள்: ஊடகவியலாளர்களுக்கு தடை

தங்க விலையில் சடுதியான மாற்றம் : வாங்கவுள்ளோருக்கு முக்கிய தகவல்

தங்க விலையில் சடுதியான மாற்றம் : வாங்கவுள்ளோருக்கு முக்கிய தகவல்


  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
மரண அறிவித்தல்

வடமராட்சி, London, United Kingdom

23 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நவாலி, உடுவில், பிரித்தானியா, United Kingdom

11 Jun, 2025
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Stains, France

22 Jun, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Wembley, United Kingdom

05 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, ஜேர்மனி, Germany

08 Jul, 2015
13ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
மரண அறிவித்தல்

சுழிபுரம், சுதுமலை, வவுனியா, Colombes, France

30 Jun, 2025
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, நியூ யோர்க், United States, கோண்டாவில் கிழக்கு

30 Jun, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, கிளிநொச்சி

01 Jul, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Herne, Germany

30 Jun, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரங்குணை, குப்பிளான், சென்னை, India, Toulouse, France

24 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொழும்பு, Brampton, Canada

29 Jun, 2025
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
38ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், India, புங்குடுதீவு

30 Jun, 1987
மரண அறிவித்தல்

புளியங்கூடல், கல்விளான், விசுவமடு, கொக்குவில், Paris, France, Basel, Switzerland

27 Jun, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், திருநகர், Scarborough, Canada

01 Jul, 2024