சூரியனால் நடக்கப்போகும் பேரழிவு : தப்பிக்குமா மனித குலம்
ஒவ்வொரு 11 ஆண்டுகளுக்கும் சூரியனின் காந்தப்புலம் மாறும். இந்த நேரங்களில் சூரியனிலிருந்து புயல் வெளியாகிறது. இப்போது இதுபோன்ற ஒரு புயல் பூமியை தாக்கும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
இந்த தாக்குதலிலிருந்து மனித குலம் தப்புமா? நாசா உள்ளிட்ட சர்வதேச விண்வெளி ஆய்வு அமைப்புகள் எடுத்துள்ள பாதுகாப்பு முயற்சிகள் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
பூமியில் காந்தப்புலம் இருப்பதால் அதை நோக்கி காந்தங்கள் ஈர்க்கப்படுகின்றன. இதேபோல சூரியனிலும் இருக்கிறது.
சூரிய கதிர்வீச்சு
இந்த காந்த புலம் நிலையாக இல்லாமல் ஒவ்வொரு 11 ஆண்டுகளுக்கு ஒருமுறை இங்கேயேயும், அங்கேயும் மாறிக்கொண்டே இருக்கிறது.
இந்த நிகழ்வின்போது சூரியனிலிருந்து கதிர்வீச்சு வெடித்து கிளம்புகிறது. இதைத்தான் சூரிய புயல் என்கிறார்கள்.
2024 தொடங்கி 2026 வரை சூரியனில் காந்தப்புல மாற்றம் நடப்பதால் வலுவான சூரிய புயல்கள் உருவாகி வருகிறது என்றும், இது பூமியை தாக்க வாய்ப்பு இருக்கிறது எனவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
இந்த புயல்கள் ஒளியின் வேகத்தில் பூமியை நெருங்கும். அதாவது சூரியனில் புயல் உருவான 8வது நிமிடத்தில் அது பூமியை தாக்கும். எனவே இதிலிருந்து தப்பிப்பது, அல்லது புயல் உருவானதை கண்டுபிடிப்பதே கொஞ்சம் கஷ்டம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சூரிய புயல்
இப்போது வரும் புயல் கடந்த 2022ம் ஆண்டு வந்த புயலை விட வலிமையானதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டடுள்ளது.
இந்நிலையில், சூரிய புயல் பூமியை தாக்கினால் என்ன செய்வது? அதன் பாதிப்புகளிலிருந்து மக்களை எப்படி காப்பாற்றுவது? உடனடியாக செய்ய வேண்டிய உதவிகள் என்ன? உள்ளிட்டவை நாசா குழுவால் பயிற்சி செய்து பார்க்கப்பட்டிருக்கிறது.
மேலும் இந்த சூரிய புயலிலிருந்து தப்பிக்க வேண்டுமாக இருந்தால், அமெரிக்கா, சீனா, ரஷ்யா என எல்லா நாடுகளும் வேற்றுமையை மறந்து இது தொடர்பான ஆய்வை நடத்தினால் மனித குலம் காப்பாற்றப்பட வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
