தந்தையை கொடூரமாக கொலை செய்து எரித்த மகன்..! வெளியாகிய பின்னணி
கொழும்பின் புறநகர பகுதியான ஹோக்கந்தர தெற்கு வித்தியராஜ மாவத்தையில் தந்தையை எரித்து கொலை செய்த மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சம்பவத்தில் 57 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையான ரஞ்சித் சேனாரத்ன என்ற நபரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
வாக்குவாதம்
கொலையாளியான மகன் ஹோக்கந்தர சிங்கப்புர பிரதேசத்தில் இன்று காலை கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையியல், சந்தேக நபர் சிங்கப்புர பிரதேசத்தில் புத்தர் சிலை ஒன்றுக்கு அருகில் இருப்பதாக மேல் மாகாண புலனாய்வுப் பிரிவின் காவல்துறை சார்ஜன்ட் இந்திரஜித் என்பவருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மாலபே காவல் நிலையத்தின் காவல்துறை குழு சந்தேக நபரை இன்று காலை 8 மணியளவில் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சமபவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, " நேற்று முன்தினம் இரவு வீட்டில் தந்தைக்கும் மகனுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தந்தை முதலில் கத்தியால் தாக்கியதால், ஆத்திரமடைந்து தந்தையை மண் வெட்டி மற்றும் பொல்லால் தாக்கி வீட்டின் நுழைவு கதவுக்கு எதிரில் உடலில் பெட்ரோலை ஊற்றி எரித்து கொலை செய்ததாக விசாரணையின் போது கைது செய்யப்பட்டசந்தேக நபர் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.