நூற்றுக்கணக்கான கைதிகளுக்கு பொது மன்னிப்பு
நாடளாவிய ரீதியில் பொசன் போயா தினத்தை முன்னிட்டு சிறைக் கைதிகளுக்கு விசேட பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் மூலம் அதிபருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் (Department of Prisons Srilanka) தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில், சிறு குற்றங்களுக்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த 289 கைதிகளுக்கு இன்று (21) விசேட பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் காமினி பி திசாநாயக்க (Gamini B Dissanayake) தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு சிறைச்சாலை
இதேவேளை, போயா தினத்தையொட்டி அதிபரின் பொது மன்னிப்பின் கீழ் மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து 7 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டு அவர்கள் இன்று காலை விடுதலை செய்யப்பட்டதாக மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியாச்சகர் என். பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
சிறு குற்றம், தண்டப்பணம் செலுத்த முடியாதவர்கள் இவ்வாறு பொது மன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![](https://cdn.ibcstack.com/bucket/63039cb22bd37.webp)
![இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….](https://cdn.ibcstack.com/article/528b1858-c217-44bd-aa75-8d6f4258fc70/24-666c04ec6747a-sm.webp)