இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் விசேட சந்திப்பு
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு
இலங்கைக்கு கடன் வழங்கும் தரப்பினருக்கும் சர்வதேச நாணய நிதியத்துக்கு இடையிலான அடுத்த கட்டப் பேச்சுவார்த்தை எதிர்வரும் 3 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அதிபரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த பேச்சுவார்த்தையின் போது இலங்கையின் கடன் மறுசீரமைப்பு மற்றும் கடன் வழங்குனர்களின் மாநாடு என்பன குறித்து விரிவாக ஆராயப்படவுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு தொடர்பான அதிபரின் சிரேஷ்ட ஆலோசகரும் அதிபர் பணிக்குழாமின் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவுக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் மூவரடங்கிய குழுவுக்கும் இடையே விசேட சந்திப்பொன்று நேற்று அதிபர் செயலகத்தில் நடைபெற்றுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் மூவரடங்கிய குழு
இந்தச் சந்திப்பில், தனது பதவிக்காலம் முடிந்து வெளியேறவுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி துபைகஸ் பெரிடனுசெட்யவன் (Tubagus Feridhanusetyawan) மற்றும் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள சர்வட் ஜஹான் (Sarwat Jahan) ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
இதன்போது இலங்கையின் கடன் மறுசீரமைப்பு மற்றும் கடன் வழங்குனர்களின் மாநாடு என்பன தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளதாகவும் இது தொடர்பான அவரின் கருத்துக்களை சர்வதேச நாணய நிதியத்துக்கு அவர் தெரியப்படுத்துவார் எனவும் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.