கெஹெல்பத்தர உள்ளிட்ட பாதாள உலக நபர்கள் குறித்து சபைக்கு விசேட அறிக்கை!
கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட பாதாள உலக நபர்கள் மற்றும் நாட்டில் நடைபெறும் பாதாள உலக நடவடிக்கைகள் குறித்து அரசாங்கம் அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் சிறப்பு அறிக்கையை வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையை பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால வெளியிடுவார் என கூறப்படுகிறது.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளும் அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் பாதாள உலக நடவடிக்கைகள் மற்றும் அவ்வப்போது நடைபெறும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் குறித்து கேள்விகளை எழுப்ப முடிவு செய்துள்ளன.
துப்பாக்கிச் சூடு கலாச்சாரம்
நாடு முழுவதும் அவ்வப்போது நடைபெறும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தேசிய பாதுகாப்புக்கு கடுமையான அச்சுறுத்தலாக இருப்பதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் குற்றம் சாட்டியுள்ளார்.
அத்துடன், அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளால் துப்பாக்கிச் சூடு மற்றும் ஒப்பந்த கொலைகள் செய்யும் கலாச்சாரம் நாடு முழுவதும் தொடர்ந்து பரவி வருவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
