வேகக்கட்டுப்பாட்டை இழந்த வாகனத்தால் ஏற்பட்ட பாரிய விபத்து!
கஹதுடுவ பகுதியில் சீமெந்து ஏற்றிச் செல்லும் வாகனம் மோதி மூன்று வாகனங்கள் பலத்த சேதத்திற்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இலங்கை கஹதுடுவ பொல்கசோவிட்ட சந்தியில் சீமெந்து ஏற்றிச் சென்ற வாகனம் ஒன்று மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டி மற்றும் கார் ஆகியவற்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியஆதாடு, அருகிலிருந்த மின்சார உபகரண விற்பனை நிலையத்தின் மீதும் மோதியதாக கஹதுடுவ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பிலியந்தலையில் இருந்து மத்தேகொட நோக்கி பயணித்த வாகனதே்தின் பிரேக் செயலிழந்ததன் காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த விபத்தினால் கடைக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதுடன் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டிக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவரும் முச்சக்கரவண்டியின் சாரதியும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், கஹதுடுவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.