மக்கள் போராட்டங்களின் மத்தியில் நிதி அமைச்சராக பதவியேற்ற அலி சப்ரி பதவி விலகல்!
sri lanka
government
ali sabry
finance minister
By Kalaimathy
சிறிலங்காவில் புதிதாக அமைக்கப்பட்ட அமைச்சரவையில் நிதியமைச்சராக அலி சப்ரி நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்த புதிய நியமனம் நேற்றைய தினம் கோட்டாபய முன்னிலையில் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தற்போது அவர் தனது நிதி அமைச்சர் பதவியை இராஜினாமா செய்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் பொருளாதார நெருக்கடி தொடர்பாக அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் எதிர்ப்புக்கு மத்தியில் நேற்று கோட்டாபயவினால் நியமிக்கப்பட்ட நான்கு பேர் கொண்ட தற்காலிக அமைச்சரவையில் அலி சப்ரியும் அங்கம் வகித்தார்.
இந்நிலையிலேயே அவர், அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அனுப்பிய கடிதத்தில், நிதியமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.