ஒழுங்கு செய்யப்பட்டுள்ள விசேட கலந்துரையாடல்- அவசர அவசரமாக நாடு திரும்பும் பசில்?
அமெரிக்கா சென்றிருந்த பசில் ராஜபக்ச ஜனவரியில் நாடு திரும்ப திட்டமிட்டிருந்தார். எனினும், இன்று இரவே அவர் அவசரமாக நாடு திரும்ப தயாராகவுள்ளார் என தென்னிலங்கை ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
அதனடிப்படையில் இன்று இரவு லொஸ் ஏஞ்சல்ஸில் இருந்து புறப்படும் அவர் நாளை துபாய் வழியாக சிறிலங்கா வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா வந்தடைந்ததும் அரச தலைவரின் செயலாளர் பீ.பி ஜயசுந்தர தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை தொடர்பில் ஆராயத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே பசில் ராஜபக்ச நாட்டிற்கு வந்தவுடன் இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக விசேட கலந்துரையாடலொன்றை கூட்டியுள்ளதாகவும் தெரியவருகிறது.
எனினும் பீ.பி ஜயசுந்தர தனது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளதாகவும் கோட்டாபய ராஜபக்ச அதனை ஏற்றுக்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.