இராணுவ சிப்பாயினால் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து : அம்பலமான பாரிய மோசடி
வாதுவ பிரதேசத்தில் மசாஜ் நிலையங்கள், பேஸ்புக் மற்றும் இணையம் மூலம் அடையாளம் காணப்பட்ட பெண்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்து அவர்களிடமிருந்து தங்க நகைகளைக் கொள்ளையடித்த முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவரை காவல்துறையினர் நேற்று (28) கைது செய்துள்ளனர்.
சந்தேக நபரான இராணுவ சிப்பாயை காவல்நிலைய தலைமையகத்தின் போலி அடையாள அட்டை மூலம் அச்சுறுத்தி இந்த குற்றச் செயல்களில் ஈடுபடுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பண்டாரகம, மில்லனிய பிரதேசத்தை சேர்ந்த 53 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கொட்டாவ பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் காவல்துறையினருக்கு செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் மசாஜ் நிலையங்கள், பேஸ்புக் மற்றும் இணையத்தளங்களில் இருந்து அடையாளம் காணப்பட்ட பெண்களை வாதுவ, மொரொன்துடுவ மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகளுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலும் பல செய்திகளை இன்றைய மதிய நேர செய்தித் தொகுப்பில் காண்க.
