யுத்தக்குற்றச்சாட்டுக்களில் இருந்து படையினரை பாதுகாப்போம் - சவேந்திரசில்வா ஆணித்தரம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் படையினர் தொடர்பாக முன்வைக்கப்பட்ட முன்வைக்கப்பட்டுள்ள யுத்த குற்றச்சாட்டுக்களில் இருந்து அவர்களை பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்வதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார்.
படைவீரர் ஒருவரின் திருமணநிகழ்வில் கலந்துகொண்ட இராணுவத் தளபதியிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், எங்கள் கடமைகளில் ஈடுபட்டுள்ள படைவீரர்கள் என்ற அடிப்படையில் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் தற்போதைய அமர்வில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதற்கு அரசாங்கம் எடுத்துள்ள முயற்சிகள் குறித்து நாங்கள் மகிழ்ச்சியடையலாம்.
மனித உரிமை பேரவையால் சில விடயங்களை செய்ய முடியும் சில விடயங்களை செய்ய முடியாது என்பது உங்களுக்கு தெரியும்.மனிதாபிமான நடவடிக்கைகளின் போது நாங்கள் எவ்வளவு செய்துள்ளோம் என்பது எங்களுக்கு தெரியும் என குறிப்பிட்டார்.
பயங்கரவாதிகள் அப்பாவி பொதுமக்களை மனித கேடயங்களாக யன்படுத்திக்கொண்டிருந்தவேளை நாங்கள் நாங்கள் மிகவும் பொறுமையுடன் செயற்பட்டோம் அதன் காரணமாகவே எங்களால் உயிரிழப்புகளை தவிர்க்கமுடிந்தது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்

