கடுமையாகத் தாக்கப்பட்ட மாணவன் - தலைமறைவாகியுள்ள அதிபர்!
மட்டக்களப்பில் பாடசாலை மாணவன் ஒருவர் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளதாக காவல்துறையில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தாக்குதலுக்குள்ளான மாணவன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
காத்தான்குடி காவல்துறை பிரிவிற்குட்பட்ட பாடசாலையொன்றிலேயே ஐந்தாம் ஆண்டு மாணவன் ஒருவன் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார்.
தலைமறைவாகியுள்ள அதிபர்
குறித்த மாணவனைத் தாக்கிய பாடசாலை அதிபர் தலைமறைவாகியுள்ள நிலையில், உடந்தையாக இருந்த ஆசிரியையொருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காத்தான்குடி காவல் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.ஏ.றஹீம் தெரிவித்தார்.
மாணவன் பாடசாலையின் மேல் மாடிக்கு அழைத்துச் வெல்லப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டிருந்தார். கைது செய்யப்பட்ட பெண் ஆசிரியை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர் தேடுதலில் காவல்துறையினர்
தலைமறைவாகியுள்ள அதிபர் தொடர்ந்தும் தேடப்பட்டுவருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் தாக்குதலுக்கு உள்ளான மாணவன் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.