ஒன்டாரியோவில் தமிழ் இனப்படுகொலை வாரம் தொடர்பில் மனு - நீதிமன்றின் அதிரடி அறிவிப்பு!
சிங்கள கனேடிய குழுக்களால் ஒன்ராறியோ நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் ஒன்டாரியோவில் தமிழ் இனப்படுகொலை வாரத்தை பிரகடனப்படுத்துவதற்கு தடை கோரியே கனேடிய நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் மே 18 ஆம் திகதியுடன் முடிவடையும் வகையில், ஏழு நாட்களை தமிழ் இனப்படுகொலை வாரமாக குறிப்பிடுவது என தீர்மானிக்கப்பட்டிருந்தது.
சிங்கள கனேடிய குழுக்கள் மனுத்தாக்கல்
இந்நிலையிலேயே அந்த செயற்பாடு சட்டவிரோதமானது என தெரிவித்து பல சிங்கள கனேடிய குழுக்கள் ஒன்ராறியோ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தன.
சர்வதேச சட்டத்தின் கீழ் எந்தவொரு தமிழ் இனப்படுகொலையும் அங்கீகரிக்கப்படவில்லை எனவும், இனப்படுகொலை என்ற சொல்லை பயன்படுத்த கனேடிய மாகாண அரசாங்கத்திற்கு அதிகாரம் இல்லை எனவும் அவர்கள் தங்களது மனுவில் தெரிவித்திருந்தனர்.
நீதிமன்றம் நிராகரிப்பு
இந்நிலையில், இந்த வழக்கினை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட கனேடிய நீதிமன்றம், மனுவினை நிராகரித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.