இந்தியாவின் கடும் எதிர்ப்பு : பின்வாங்கியது இலங்கை
இந்தியாவின்(india) கடும் எதிர்ப்பை அடுத்து , பாகிஸ்தானுடன்(pakistan) நடத்த இருந்த கடற்படை பயிற்சியை இலங்கை(sri lanka) இரத்து செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது தொடர்பில் வெளியான செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
திருகோணமலை(trincomalee) கடற்பகுதியில் இலங்கை, பாகிஸ்தான் நாடுகள் இடையே கடற்படைகள் கூட்டுப்பயிற்சி மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. இதுகுறித்து பாதுகாப்பு தொடர்பான தமது கவலைகளையும், அதிருப்தியையும் இந்தியா தெரிவித்து இருந்தது.
கடற்படை பயிற்சி இரத்து
இதையடுத்து, இலங்கை, பாகிஸ்தான் கடற்படைகள் மேற்கொள்ள இருந்த பயிற்சி இரத்து செய்யப்பட்டுள்ளதாக பி.டி.ஐ., செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும், இலங்கை மற்றும் பாகிஸ்தானிடம் இருந்து எந்த அதிகாரபூர்வமான தகவல்கள் வெளியிடப்படவில்லை.
இலங்கை வடகிழக்கு கடலோர பகுதியாக திருகோணமலை, இந்தியாவின் கடல்சார் பாதுகாப்பு நலன்களுக்கு முக்கிய மையமாக கருதப்படுகிறது.
மோடியின் இலங்கை பயணத்தில் கைச்சாத்தான ஒப்பந்தம்
பிரதமர் மோடியின் சமீபத்திய இலங்கை பயணத்தின் போது திருகோணமலையை எரிசக்தி மையமாக மேம்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா, இலங்கை மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகள் கையெழுத்திட்டன என்பது குறிப்பிடத்தக்கது. என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
