தமிழ் அரசியல் தலைவர்களின் தலையீட்டால் தென்னிலங்கையில் நிறுத்தப்பட்ட சுய விபர சேகரிப்பு!
தமிழ் அரசியல் தலைவர்களின் எதிர்ப்பினால் கொழும்பு நகர மக்களிடமிருந்து தகவல்களை சேகரிக்கும் சிறிலங்கா காவல்துறையினரின் வேலைத்திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
காவல்துறையினர் பொதுமக்களின் தகவல் சேகரிப்பது தொடர்பில் சிறிலங்கா அதிபருடன் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் தொலைபேசியூடாக கலந்துரையாடியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையினர் வீடு வீடாகச் சென்று குடும்ப விபரங்களைப் பூர்த்தி செய்யுமாறு படிவத்தைக் கொடுத்தனர். இது தொடர்பாக ஜனாதிபதியுடன் தொலைபேசியில் பேசினேன்.
அந்த உரையாடல் தொடர்பில் மனோகணேசன் கருத்துத் தெரிவிக்கையில்,
“சம்பவம் தொடர்பில் ரணில் விக்ரம சிங்கவிடம் தகவல் தெரிவித்த போது, அப்படி தகவல்களை சேகரிப்பது தவறு என்று ஒப்புக்கொண்டார்.
வீடுவீடாக துண்டு பிரசுரம் விநியோகிக்கும் காவல்துறை
இந்தப் பணியை உடனடியாக நிறுத்துமாறு காவல்துறையினருக்கு உத்தரவு பிறப்பிப்பதாகவும் அவர்கள் என்னிடம் உறுதியளித்தார்” எனவும் தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பெரும்பான்மையான தமிழர்கள் வாழும் வெள்ளவத்தை மற்றும் பம்பலப்பிட்டி பிரதேசங்களில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் துண்டுப் பிரசுரம் ஒன்றை வழங்கிய காவல்துறையினர், அனைத்து குடியிருப்பாளர்களையும் தங்கள் தகவல்களை உள்ளீடு செய்து பதிவு செய்யுமாறு அறிவித்தியுள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் காவல்துறை அமைச்சர் டிரான் அலஸ், காவல்துறைமா அதிபர் மற்றும் அதிபரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோரிடம் உண்மைகளை முன்வைத்துள்ளார்.
இது காவல்துறை அரசாங்கமல்ல
இது காவல்துறை அரசாங்கமல்ல, காவல்துறை சட்டத்தின் கீழ் பதிவு செய்யுங்கள். விசேடமான காலத்தில் இது இடம்பெறலாம். சட்டத்தை மீறுபவர்களை அடையாளம் கண்டு கைது செய்வதில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.
காவல்துறையில் பதிவு செய்ய வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் நகர மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
