இலங்கையில் தீவிரமடையும் கொரோனா! 75 பேருக்கு புதிதாக தொற்று - இருவர் பலி
COVID-19
Sri Lanka
By Vanan
தீவிரமடையும் கொரோனா
இலங்கையில் இன்று கொவிட்-19 வைரஸினால் பீடிக்கப்பட்ட 75 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, நாட்டில் இதுவரை பதிவான கொவிட்-19 தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 664,647 ஆக அதிகரித்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் 651 பேர் இன்னும் மருத்துவமனையிலும், வீட்டில் மருத்துவ மேற்பார்வையின் கீழும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தற்போது வரை மொத்தமாக கொவிட்-19 தொற்றிலிருந்து 647,463 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கொரோனா மரணங்கள்

இதற்கிடையில், மேலும் 2 கொரோனா மரணங்களை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
60 வயதுக்கு மேற்பட்ட இரு பெண்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதன்படி, இலங்கையில் பதிவான மொத்த கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை 16,533 ஆக அதிகரித்துள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்