சர்வதேச ஊழல் பட்டியலில் இலங்கையின் பாரிய பாய்ச்சல்: அநுர காணும் தொடர் வெற்றி
கடந்த 70 வருட கால அரசியல் வரலாற்றில் ஊழல் நிறைந்த நாடாகப் பார்க்கப்பட்ட இலங்கை, அநுர அரசாங்கம் பொறுப்பேற்ற மிகக்குறுகிய காலத்தில் சர்வதேச ஊழல் தரவரிசைப் பட்டியலில் (CPI) ஒரு பாரிய பாய்ச்சலை நிகழ்த்தியுள்ளது.
கடந்த வருடத்தில் மிகவும் பின்தங்கியிருந்த இலங்கை, தற்போது 107-வது இடத்திற்கு முன்னேறியுள்ளதை அநுர அரசாங்கத்தின் ஊழலுக்கு எதிரான நிலைப்பாட்டிற்குக் கிடைத்த வெற்றியாக மக்களால் பார்க்கப்படுகின்றது.
அதிகார மட்டங்களில் இருந்த ஊழல் சங்கிலியை உடைத்து, நிர்வாகத்தைச் சீரமைத்ததன் மூலம் சர்வதேச அரங்கில் இலங்கையின் நற்பெயரை இந்த அரசாங்கம் மீட்டெடுத்துள்ளது.
பல தசாப்தங்களாகத் தீர்க்க முடியாத ஊழல் கறையைத் துடைத்து, 70 வருடப் பாரம்பரியக் கட்சிகள் செய்யத் தவறியதைப் புதிய ஆட்சிமுறை சாத்தியமாக்கியுள்ளதாக மக்களும் கருத்து தெரிவித் துவருகின்றனர்.
உலகளவில் ஊழலற்ற நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னேறியிருப்பது, அநுர அரசாங்கம் முன்னெடுக்கும் சிஸ்டம் சேஞ்ச் (System Change) வெறும் பேச்சு மட்டுமல்ல, அது செயலில் உள்ளது என்பதற்கான சான்றாக மக்களால் பார்க்கப்படுகின்றது.
இது தொடர்பிலும் அண்மைய அரசியல் களம் குறித்தும் விரிவாக ஆராய்கின்றது லங்காசிறியின் நாட்டு நடப்பு நிகழ்ச்சி...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |