குளத்தில் வீழ்ந்த இளைஞன் சடலமாக மீட்பு!
ஹட்டன் காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட பன்மூர் குளத்தில் வீழ்ந்த இளைஞன் முற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் நேற்று (03) முற்பகல் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
எபோட்சிலி மொன்டிபெயார் தோட்டத்தை சேர்ந்த 22 வயதுடைய மைக்கல் பவன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகள்
மேலும், குறித்த நபருடைய சடலம் கண்டியிலிருந்து வரவழைக்கப்பட்ட சுழியோடிகள் மூலம் மீட்கப்பட்டு நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு பிரதே பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.
கடந்த முதலாம் திகதி இரவு எட்டு மணியளவில் ஹட்டன் நகரிலிருந்து இரண்டு நண்பர்களுடன் குறித்த இளைஞன் மென்டிபெயார் தோட்டத்திலுள்ள தனது வீட்டிற்கு நடந்து சென்ற போதே வீதியோரத்திலுள்ள குளத்தில் வீழ்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், குறித்த நபருடன் சென்ற இரண்டு இளைஞர்களையும் சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் கைது செய்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஹட்டன் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.