சிறிலங்கா அரசின் செயல்பாடு தொடர்பில் உலக வங்கியின் நிலைப்பாடு!
பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதற்கு இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பில் உலக வங்கி தனது பாராட்டினை தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு தமது முழுமையான ஆதரவை வழங்குவதாக உலக வங்கி அறிவித்துள்ளது.
குறித்த விடயங்களை உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பரமேஷ்வரன் ஐயர் தெரிவித்துள்ளார்.
இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவுடன் நிதி அமைச்சில் இடம்பெற்ற சந்திப்பின் போது உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
ஷெஹான் சேமசிங்க
நாட்டின் நலன்புரிப் பயன் செயல்திட்டம் தொடர்பில் குறித்த சந்திப்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
இதேவேளை, குறிப்பிட்ட சட்டமூலத்தின் புதிய ஏற்பாடுகளை நாடாளுமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றக் கிடைத்தமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும் என இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
நிறைவேற்றுப் பணிப்பாளர்
நலன்புரிப் பயனைப் பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கை வெளிப்படைத் தன்மையுடன் சுயாதீனமாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும், இந்தியாவில் முன்னெடுக்கப்படும் சேமநலப் பயன் செயற்திட்டங்கள் பற்றிய தமது அனுபவங்களை உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் இதன்போது கூறியுள்ளார்.
