வெளிநாட்டு கையிருப்பை 3.6 பில்லியன்களாக உயர்த்தியுள்ளோம் : மனுஷ நாணயக்கார

Manusha Nanayakkara Sri Lanka Economic Crisis Sri Lanka Economy of Sri Lanka
By Beulah Dec 23, 2023 12:47 AM GMT
Report

ஒரு டொலர் கூட இல்லாத நிலையிலேயே நாம் இந்த நாட்டை பொறுப்பேற்றோம். மத்திய வங்கியின் டொலர் எண்ணிக்கையை விட அதிகமான எண்ணிக்கையில் எமது புலம்பெயர் தொழிலாளர்களின் கைகளில் இருந்தன என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

அதிபர் ஊடக மையத்தில் நேற்று(22) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் குறித்து மேலும் அவர் தெரிவிக்கையில்,

குறைக்கப்படவுள்ள மின் கட்டணம்: மக்களுக்கு வெளியான அறிவிப்பு

குறைக்கப்படவுள்ள மின் கட்டணம்: மக்களுக்கு வெளியான அறிவிப்பு

பொருளாதார நெருக்கடி

“ஒவ்வொரு முறையும் பிரபலமான முடிவுகள் எடுக்கப்பட்டபோது ஒரு நாடாக நாம் தோல்வியடைந்துள்ளோம்.

வெளிநாட்டு கையிருப்பை 3.6 பில்லியன்களாக உயர்த்தியுள்ளோம் : மனுஷ நாணயக்கார | Sri Lanka Economic Growth Manuha Nanayakkara

இதில் இருந்து எதிர்க்கட்சிகள் கூட தப்ப முடியாது. அவர்களும் நாட்டின் அபிவிருத்திக்காக முடிவுகளை எடுக்கும்போது அவற்றை எதிர்த்ததும் பிரபலமான தீர்மானம் என்பதால்தான். மேலும் குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக அவற்றை எதிர்த்தனர்.

இறுதியில், நமது நாடு ஒரு மோசமான பொருளாதார நெருக்கடியை சந்தித்து.

நாடு எதிர்கொண்ட நெருக்கடியின் போது, இந்த நாட்டை மீளக் கட்டியெழுப்ப முடியாது என்பதை அவர்கள் புரிந்து கொண்டதால் தான் இந்தப் பொறுப்பை ஏற்க முடியாது எனப் பின்வாங்கினர்.

அவர்களை போலவே அதிபரும் நாமும் இந்தப் பொறுப்பை மறுத்திருந்தால் எதிர்கட்சியினரின் பேரணிகளுக்கு பஸ்களில் கூட மக்கள் வந்திருக்கமாட்டார்கள்.

இப்போது எங்கள் மீது குற்றம் சாட்டும் சிலருக்கு நாங்கள் அப்போது எதிர்க்கட்சியில் இருந்தமை நினைவில் இல்லை. அவர்கள் அரசாங்கத்தில் இருந்தார்கள். எதிர்க்கட்சியில் இருந்து வந்தே இதனைச் செய்தோம்.

டொலர் கையிருப்பு 

மத்திய வங்கியின் டொலர் கையிருப்பு இன்று 3.6 பில்லியன் டொலர்கள் வரை அதிகரித்துள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வராவிட்டால், இந்நாட்டில் டொலர்கள் இல்லாமல், எதையும் இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருக்கும்.

வெளிநாட்டு கையிருப்பை 3.6 பில்லியன்களாக உயர்த்தியுள்ளோம் : மனுஷ நாணயக்கார | Sri Lanka Economic Growth Manuha Nanayakkara

நாங்கள் ஆட்சிக்கு வருகின்ற காலத்தில் அப்போது, நினைத்தவாறு பணம் அச்சிடப்பட்டது. அதன் காரணமாக பணவீக்கம் அதிகரித்தது. கடந்த ஆண்டு இறுதியில் ஒரு டொலர் 365 ரூபாவாக இருந்தது. டொலரின் பெறுமதி 600 ரூபாவிலிருந்து 700 ரூபா வரை அதிகரிக்கும் என்று அக் காலத்தில் எதிர்வுகூறப்பட்டது.

ஆனால் இன்றைய நிலவரப்படி டொலரின் பெறுமதியை சுமார் 320 ரூபாவுக்கு கொண்டு வர முடிந்துள்ளது. டொலரின் பெறுமதி 11% சதவீதத்தினால் குறைந்துள்ளது.

இவ்வாறு நாம் அக்கால நிலைமையை மாற்றவில்லையென்றால் வெளிநாட்டில் கல்வி கற்கும் பிள்ளைக்கு பணத்தை அனுப்ப முடியாத நிலை தோன்றியிருக்கும்.

வட்டி விகிதம்

நாம் இந்த நாட்டை பொறுப்பேற்கும்போது, வட்டி விகிதம் 25 சதவீதத்திற்கு மேல் இருந்தது. ஆனால் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு கொள்கை ரீதியாக வட்டி விகிதத்தை தனி இலக்கத்துக்கு கொண்டு வந்துள்ளோம்.

வெளிநாட்டு கையிருப்பை 3.6 பில்லியன்களாக உயர்த்தியுள்ளோம் : மனுஷ நாணயக்கார | Sri Lanka Economic Growth Manuha Nanayakkara

இப்போது வட்டி விகிதம் 9 சதவீதமாகும். வங்கியில் கடன் பெறக் கூடிய நிலைக்கு நாட்டை கொண்டுவந்தோம்.

கடந்த ஆண்டு, ஆறு இலட்சம் சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வந்தனர். ஆனால் இந்த ஆண்டு சுமார் பன்னிரண்டாயிரம் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். கடந்த காலங்களில் சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு செல்ல வேண்டாம் என்று அந்த நாடுகள் கூறும் நிலை ஏற்பட்டிருந்தது.

இலங்கையில் எரிபொருள் இல்லை, மின்சாரம் இல்லை, பாதுகாப்பு இல்லை என்று அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. தற்போது இந்நிலை மாற்றப்பட்டுள்ளது.

எந்த நாடும் ஒரு டொலர் கூட வழங்காத நாடாக அன்று எமது நாடு இருந்தது. ஆனால் தற்போது சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து சுமார் 350 மில்லியன் டொலர்கள் கிடைத்துள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியிலிருந்து 200 மில்லியன் டொலர்களும் உலக வங்கியிடமிருந்து 250 மில்லியன் டொலர்களும் கிடைத்துள்ளது.

அண்மைக்காலமாக மக்களும் “சிஸ்டம் சேஞ்” வேண்டும் என்று கூறி வருகின்றனர். இப்போது அவ்வாறான மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றது. வரி சரியாக வசூலிக்கப்படுகிறது. எல்லோரும் வரி செலுத்துகிறார்கள்.

நாட்டை விட்டு வெளியேறியவர்கள் அந்த நாடுகளுக்குச் சென்று பெரும் வரியை செலுத்துகின்றனர். சமுர்த்தி கொடுப்பது போன்று வரிச்சலுகைகளை வழங்கி நாட்டை கட்டியெழுப்ப முடியாது.

இப்போது போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கைதுசெய்யப்படுகிறார்கள். அனால் அதனையும் “மீடியா ஷோ” என்று கூறுகின்றார்கள்.

இது இந்நாட்டில் உண்மையாக நடக்க கூடாதா? வீதிகளில் ஒழுக்கம் ஏற்படுத்தப்படுகிறது. கல்விக்கான திட்டம் உருவாக்கப்படுகிறது. உழைப்புக்கு மரியாதை கொடுக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

நாடு டிஜிட்டல் மயமாக்கப்படுகிறது. வெளிநாடுகள் ஈர்க்கப்பட்டு வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.” என்றார்.  

அரசாங்க காணியை வழங்குவதாக கூறி பண மோசடி

அரசாங்க காணியை வழங்குவதாக கூறி பண மோசடி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்      


ReeCha
மரண அறிவித்தல்

மானிப்பாய், நவக்கிரி, Zürich, Switzerland

19 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, நெடுந்தீவு, பெரியதம்பனை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரங்குணை, Neuilly-sur-Marne, France

22 Sep, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில், Bielefeld, Germany

18 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மூதூர், உடுப்பிட்டி, தலைமன்னார், கொழும்பு, சாவகச்சேரி, Scarborough, Canada

23 Aug, 2025
மரண அறிவித்தல்

செட்டிக்குளம், Vitry-sur-Seine, France

13 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada, Windsor, Canada

21 Sep, 2024
30ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில்

22 Sep, 1995
3ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, பிரான்ஸ், France, ஜேர்மனி, Germany

22 Sep, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, ஈச்சமோட்டை

22 Sep, 2023
மரண அறிவித்தல்

மன்னார், உயிலங்குளம், Scarborough, Canada

16 Sep, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

புத்தூர் கிழக்கு, Colindale, United Kingdom

15 Sep, 2025
அகாலமரணம்

மண்கும்பான் மேற்கு, பிரான்ஸ், France

05 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, கொழும்பு, Scarborough, Canada

21 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கிளிநொச்சி

19 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

16 Sep, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், ஜேர்மனி, Germany

20 Sep, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு

17 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊராங்குனை, Eschborn, Germany

01 Oct, 2024
மரண அறிவித்தல்

கரம்பொன், Kamp-Lintfort, Germany

16 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Markham, Canada

19 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வவுனியா, கிளிநொச்சி, சென்னை, India

18 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

அல்வாய், சங்கத்தானை

18 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு

05 Oct, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Southend, United Kingdom

12 Sep, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

20 Sep, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், துன்னாலை, வல்வெட்டி, துணுக்காய், கொழும்பு, வவுனியா

20 Sep, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Villeneuve-Saint-Georges, France

20 Sep, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025