பொதுஜன பெரமுனவிலிருந்து சுதந்திர கட்சியை வெளியேற்ற வலியுறுத்தல்!
sri lanka
press meet
podujana peramuna
sri lanka freedom party
pramitha bandara tennakoon
By Kalaimathy
சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் பொதுஜன பெரமுன தொடர்ந்தும் அரசியலில் ஈடுபடுவதா இல்லையா என்பதை ஆராய்ந்து பார்க்குமாறு இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கையை பொதுஜன பெரமுனவின் தலைவர்களிடம் விடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுனவின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் தலைமையகத்தில் இன்று ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
குடும்பம் ஒன்றில் கூட இப்படியான பிரச்சினைகளுடன் முன்நோக்கி செல்ல முடியாது. நிலையான அரசியல் முகாமாக இருக்கும் பொதுஜன பெரமுன இது சம்பந்தமாக கடும் முடிவு ஒன்றை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.