யாழில் பெருமளவு எரிபொருட்களோடு சிக்கிய நபர்
Jaffna
Sri Lanka Police Investigation
Sri Lanka Fuel Crisis
By Vanan
யாழ். சுன்னாகம் காவல்நிலைய பிரிவில் 11 பரல்களில் எரிபொருள்களைப் பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
8 பரல்களில் மண்ணெண்ணெய், 2 பரல்களில் பெற்றோல் மற்றும் ஒரு பரல் டீசல் என்பனவே கைப்பற்றப்பட்டன என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
சுன்னாகம் மயிலங்காடு பகுதியில் உள்ள வீடொன்றோடு இணைந்த கடை ஒன்றிலிருந்தே இன்று மாலை இவ்வாறு எரிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
பெற்றோல் ஒரு லீற்றர் 500 ரூபாய்க்கு விற்பனை செய்த போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டார் என்று காவல்துறையினர் கூறினர்.
சுன்னாகம் காவல் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினரே இந்தக் கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
மண்ணெண்ணெய் சுமார் ஆயிரத்து 600 லீற்றர், பெற்றோல் சுமார் 400 லீற்றர், டீசல் சுமார் 200 லீற்றர் கைப்பற்றப்பட்டுள்ளன.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி