நெருக்கடியில் உதவுவதற்கு முன் வந்தது சீனா! பதிலளிக்காமல் மௌனம் காக்கும் இலங்கை
இலங்கைக்கு டீசல் வழங்குவதற்கு சீனா இணக்கம் வெளியிட்டுள்ளது. எனினும், இந்த டீசலை பெற்றுக் கொள்வதா இல்லையா என்பதனை இலங்கை இன்னும் தீர்மானிக்கவில்லை என்று கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவசர உதவியாக இவ்வாறு டீசல் கப்பல் ஒன்றை வழங்க சீனா முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடு பாரியளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஒன்றை எதிர்நோக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் பெட்ரோலுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவி வருவதாகவும் வரிசையில் காத்திருக்க வேண்டாம் எனவும், அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே டீசல் விநியோகம் செய்யப்படும் எனவும் எரிசக்தி அமைச்சர் நேற்றைய தினம் தெரிவித்திருந்தார் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.
இந்த நிலையில், சீனாவிடமிருந்து இலங்கைக்கு எரிபொருள் அனுப்புவது தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இலங்கை அதனை பெற்றுக் கொள்வது குறித்து இன்னமும் தீர்மானம் ஒன்றை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.