எரிபொருளுக்காக காத்திருப்போரிடம் மோசடி - காவல்துறை விடுத்துள்ள எச்சரிக்கை!
நாட்டில் தற்போது எரிபொருள் பிரச்சினை நிலவி வரும் நிலையில் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சிலர் மோசடியில் ஈடுபட்டு வருவதாக காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அவ்வாறான மோசடிக்காரர்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு காவல்துறையினர் பொது மக்களை அறிவுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
எரிபொருளுக்கான வரிசையில் மோசடி
எரிபொருள் கொள்வனவு செய்வதற்காக வரிசையில் காத்திருப்போரை இலக்கு வைத்து சிலர் மோசடியில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
எரிபொருளை பெற்றுத் தருவதாக கூறி வரிசையில் காத்திருப்பவர்களிடம் பணத்தை பெற்று சிலர் மோசடியில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை எச்சரிக்கை
எனவே, இவ்வாறானவர்கள் குறித்த தகவல்கள் அறிந்திருப்பின் தமக்கு அறியப்படுத்துமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்வாறானதொரு மோசடி சம்பவமொன்று மகரகம பகுதியில் பதிவாகியுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.