இராணுவ உதவியுடன் விநியோகிக்கப்படுமா எரிவாயு- மாவட்ட செயலகம் விளக்கம்!
யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரின் உதவியுடன் எரிவாயு விற்பனை செய்யப்படவுள்ளதாக நேற்றைய தினம் வெளியிடப்பட்ட செய்தி உண்மைக்கு புறம்பானது என யாழ்.மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது.
மேலும் யாழ்ப்பாண மாவட்டத்தில் எரிவாயு விநியோகஸ்தர்கள் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்துடன் இணங்கி செயற்படுவதற்கும் விநியோக நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவும் தங்களது இணக்கப்பாட்டை 25.05.2022 ஆம் திகதியன்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற பிரதேச செயலாளர்களுடான கலந்துரையாடலில் தெரிவித்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'எரிவாயு விநியோகஸ்தர்களால் இடையூறு ஏற்படுத்தப்படும் என்பதனால் இராணுவத்தினரின் உதவியினைப் பெற ஆலோசிக்கப்படுவதாக' தெரிவிக்கப்படும் கூற்றில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது தவறான செய்தி என்பதனையும் மாவட்ட செயலகத்துடன் எரிவாயு விநியோகஸ்தர்கள் ஒத்துழைத்து செயற்பட்டு வருகின்றனர் என்பதனையும் மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.