கோட்டாபய ஒருபோதும் பதவி விலகமாட்டார்- எந்தப் பிரச்சினையையும் எதிர்கொள்ளத் தயார்; மீண்டும் அழுத்தமாகத் தெரிவித்த ஜோன்ஸ்டன்!
சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக மாட்டார் என அரசாங்கம் மீண்டும் அழுத்தமாகத் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற அமர்வு இன்றைய தினம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சமயத்தில் உரையாற்றிய அரசாங்கத்தின் பிரதம கொறடாவும் அமைச்சருமான ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அரசாங்கம் அனைத்து பிரச்சினைகளுக்கும் முகங்கொடுக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் நாட்டின் 6.9 மில்லியன் பிரஜைகள் கோட்டாபயவுக்கு வாக்களித்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார விடுத்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் பெர்னாண்டோ இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சியினருக்கும் எதிர்க்கட்சியினருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால், சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன, அவையை சிறிது நேரத்திற்கு ஒத்திவைத்தார்.