சர்வதேச அழுத்தத்தின் தாக்கத்திற்குள் சிறிலங்கா- மீண்டும் எச்சரிக்கையுடன் கூடிய வலியுறுத்தல்!
சிறிலங்கா அரசாங்கத்திற்கு ஜி.எஸ்.பி பிளஸ் சலுகை தொடர்பில் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் எச்சரிக்கையுடன் கூடிய வலியுறுத்தல் ஒன்றை விடுத்துள்ளது.
அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில் அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பயங்கரவாத தடைச் சட்டம் முழுமையாக திருத்தப்பட வேண்டும் என சிலங்கா அரசாங்கத்திற்கு சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
அரசாங்கம் பயங்கரவாத தடை சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டு கடந்த 27 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டிருந்தது.
இருப்பினும் இந்த திருத்தங்கள் போதுமானதல்ல என்றும் இது சர்வதேசத்தின் அழுத்தங்களை தணிப்பதற்கான அரசின் முயற்சி மட்டுமே என்றும் அந்த கண்காணிப்பகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அரசாங்கத்தின் செயற்பாடுகளால் ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகை அற்றுப் போகும் சூழ்நிலை ஏற்படும் என்றும் இதற்கு மத்தியில் அரசாங்கம் தற்போது சர்வதேச அழுத்தத்தின் தாக்கத்தை உணர ஆரம்பித்துள்ளதென்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே, இதனைக் கருத்திற்கொண்டு சர்வதேச சமூகம் பயங்கரவாத தடைச் சட்டத்தின் முழுமையான திருத்தத்துக்கு அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரியுள்ளது.