இலங்கை - இந்தியா பயணிகள் படகு சேவை: வெளியான தகவல்
இலங்கை (Sri Lanka)- இந்தியா (India) இடையிலான பயணிகள் படகு சேவை ஊடாக இந்த வருடத்தில் இதுவரையில் 17000 பேர் வரையிலானோர் இருநாடுகளுக்கும் இடையே பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் நேற்று (22) நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
படகுச் சேவை
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “பயணிகள் படகுச் சேவையானது 2023 ஒக்டோபர் 14ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.
தற்போது இரண்டு படகுகள் சேவையில் ஈடுபடுகின்றன எனினும் இறங்குதுறை தொடர்பான பிரச்சினை உள்ளது, இந்தியா அதற்காக உதவ தயாராக இருக்கின்றது.
இதேவேளை படகுச் சேவை மூலம் இந்த வருடத்தில் 17 000பேர் வரையிலான பயணிகள் வந்து போயுள்ளனர். 153 சேவைகள் இடம்பெற்றுள்ளன, இரண்டு படகுகள் மூலம் சேவைகள் இடம்பெறுகின்றன.
தொடர்ச்சியாக சேவைகள் இடம்பெறுவதுடன், கடல் சீற்றம் காலத்தில் நிறுத்தப்படுகின்றது, செவ்வாய்க்கிழமை தவிர மற்றைய நாட்களில் சேவைகள் இடம்பெறுகின்றன” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
