பா.ஜ.கட்சியின் தமிழ்நாட்டு தலைவரின் யாழ் விஜயம்!
இந்தியாவின் பா.ஜ.கட்சியின் தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை யாழ். நல்லைக் கந்தன் ஆலய வழிபாட்டுடன் யாழ்ப்பாண குடாநாட்டு சந்திப்பு, விஜயங்களை ஆரம்பித்து யாழ்ப்பாணத்தில் பல்வேறு பகுதிக்கு விஜயம் மேற்கொண்டார்.
இன்று காலை யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த பா.ஜ.கட்சியில் தமிழ்நாட்டு தலைவர் அண்ணாமலை வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தனை தமிழ் கலாச்சார முறைப்படி வழிபட்டதோடு, நல்லை ஆதீன குரு முதல்வரையும் சந்தித்து கலந்துரையாடினர்.
இன்று காலை 9 மணிக்கு நல்லூர் ஆலய சூழலில் யாழில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் தூதுவர் உள்ளிட்ட குழுவினர் அவரை வரவேற்று ஆலய வழிபாட்டிற்கு அழைத்துச் சென்றதோடு செந்தில் தொண்டமான், யாழ்ப்பாண இந்திய துணைத்தூதுவர் ஆகியோரும் உடனிருந்தனர்.
இதேவேளை இன்று காலை 10.30 மணியளவில் இந்திய அரசின் நிதி உதவியுடன் கட்டப்பட்ட யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையத்தையும் பார்வையிட்டார்.
இதன்போது கலாசார மத்திய நிலையத்தில் அமைக்கப்பட்டிருக்கின்றன விசேட வசதிகள் தொடர்பாகவும் அதன் திறன்கள் தொடர்பாகவும் யாழ் இந்திய துணைத்தூதுவர் ராகேஷ் நடராஜ் விளக்கம் அளித்தார்.
இதன்போது தமிழக பாஜக மாநில தலைவர் கு.அண்ணாமலை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான், யாழ் இந்திய துணைத்தூதுவர் ராகேஷ் நடராஜன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.