ஈழத் தமிழ் மக்களைப் புறம் தள்ளி சுயநலம் சார்ந்து செயற்படும் இந்தியா - கடும் விசனம்!

Tamil National People's Front Sri Lanka India
By Kalaimathy Oct 13, 2022 11:08 AM GMT
Report

இலங்கையிலுள்ள தமிழ் மக்களைப் பாதுகாக்க வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு இந்தியாவிற்கு இருக்கின்றது.

ஆனாலும் தங்களுடைய நாட்டின் நலனை மாத்திரம் வைத்துக் கொண்டு கடந்த காலங்களிலிருந்து இந்தியா செயற்பட்டு வருகின்றது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தருமலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த மாதம் இடம்பெற்ற ஐ.நா.மனித உரிமை பேரவையில் இந்தியா செயற்பட்ட விதம் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக இருக்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவை நாங்கள் வெறுக்கவில்லை, இந்தியா தங்களுடைய நலனையும் கருத்திற் கொள்வதோடு,  எங்களுடைய மக்களின் நலனையும் கருத்திற் கொண்டு, ஒரு ஆக்கபூர்வமான தீர்வுத்திட்டத்தை முன்வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.

கொக்கட்டிச்சோலை படுகொலை

ஈழத் தமிழ் மக்களைப் புறம் தள்ளி சுயநலம் சார்ந்து செயற்படும் இந்தியா - கடும் விசனம்! | Sri Lanka India Tamil Peoples Un Human Rights Tna

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை படுகொலை தினைத்தை நினைவு கூர்ந்ததற்காக கொக்கட்டிச்சோலை காவல்துறையினரால் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்காக தருமலிங்கம் சுரேஸ் இன்று முன்னிலையாகியிருந்தார்.

இதன் போதே ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், 

“வருடாந்தம் ஜனவரி மாதம் கொக்கட்டிச்சோலை படுகொலை தினம் கடைப்பிடிப்பது வழமையாகும்.

கிழக்கிலே நடந்தேறிய இனப்படுகொலைகளிலே கொக்கட்டிச்சோலைப் படுகொலை தினத்தை நாம் வருடாந்தம் நினைவுகூர்ந்து வருகின்றோம்.

அரசாங்கம் படுகொலை தினங்களை நினைவு கூருபவர்களை அச்சுறுத்துவதன் மூலம் வடக்கு கிழக்கிலே தமிழ் மக்களுக்கு நடந்த அநியாயங்களை மூடி மறைப்பதற்காக எடுக்கப்படுகின்ற காத்திரமான செயற்பாடாகவுள்ளது.

தொடர்ச்சியாக மக்களை அடக்கும் செயற்பாடுகளில் அரசாங்கம்

ஈழத் தமிழ் மக்களைப் புறம் தள்ளி சுயநலம் சார்ந்து செயற்படும் இந்தியா - கடும் விசனம்! | Sri Lanka India Tamil Peoples Un Human Rights Tna

கடந்த காலங்களிலே எமது மக்களுக்கு மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைகள் கிழக்கு மாகாணத்திலே உச்சக்கட்டமாக இருந்தது. மக்கள் தமது இறந்த உறவுகளை நேரில் சென்று நினைவேந்தல்களைச் செய்கின்ற போது, அவர்களை மிரட்டி அந்நிகழ்வுகளை அவர்களைச் செய்யவிடாது, தொடர்ச்சியாக அடக்குமுறைக்குள் வைத்திருப்பதற்காக அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது.

மீண்டும் எமது மண்ணில் இவ்வாறான படுகொலைகள் இடம்பெறக்கூடாது, தொடர்ந்தும் அடக்கு முறைகளும், இடம்பெறக்கூடாது என்பதற்காகவே நாம் இவ்வாறான நினைவேந்தல் நிகழ்வுகளைச் செய்து வருகின்றோம்.

இவ்வாறான நினைவேந்தல்கள் ஊடகாக நாம் எமக்கு நடந்த சம்பவங்களை சர்வதேச சமூகத்திற்குத் தெரியப்படுத்தி வருகின்றோம். ஆனால் சர்வதேச சமூகம், கண்மூடித்தனமாக எமது மக்களுக்கு நடந்திருக்கின்ற இனப்படுகொலைகள் தொடர்பாக மாறி மாறி வருகின்ற அரசாங்கங்களைப் பாதுகாத்து வருகின்றது.

இந்த ஆண்டு ஐ.நா. மனித உரிமை பேரவையில் கொண்டு வரப்பட்ட 51/1 பிரேரணை என்பது ஒரு வலுவற்ற பிரேரணையாகும். அதனால் எமது மக்களுக்கு எதுவித பிரஜோசனமுமில்லை.

இந்தியா தமிழ் மக்களை பாதுகாக்க வேண்டும்

ஈழத் தமிழ் மக்களைப் புறம் தள்ளி சுயநலம் சார்ந்து செயற்படும் இந்தியா - கடும் விசனம்! | Sri Lanka India Tamil Peoples Un Human Rights Tna

பொறுப்புக்கூறல் விடயத்தில் சர்வதேச நீதிமன்றிற்குக் கொண்டு சென்று சர்வதேச விசாரணை நடத்தப்படுவதன் மூலம்தான் தமிழ் மக்கள் இந்த தீவிலே வாழ்வதற்கான நிம்மதியை ஏற்படுத்தலாம்.

இல்லையேல் இவ்வாறான அடக்குமுறைக்கள் தொடரும். எமக்கு பிடியாணையை ஏற்படுத்திவிட்டு எம்மைப் பயம் காட்டும் செயலில் அரசு இவ்வாறான செயலில் ஈடுபட்டு வருகின்றது.

இதனை சர்வதேச சமூகம் உற்றுநோக்க வேண்டும். குறிப்பாக இந்தியா இவ்விடயங்களைக் கருத்திற்கொள்ள வேண்டும். இலங்கையிலுள்ள தமிழ் மக்களைப் பாதுகாக்க வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு இந்தியாவிற்கு இருக்கின்றது.

ஆனால் தங்களுடைய நாட்டின் நலனை மாத்திரம் வைத்துக் கொண்டு கடந்த காலங்களிலிருந்து இந்தியா செயற்பட்டு வருகின்றது. ஐ.நா.மனித உரிமை பேரவையில் இந்தியா செயற்பட்ட விதத்தை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக இருக்கின்றது” எனவும் அவர் மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

GalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024
மரண அறிவித்தல்

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், Mississauga, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, London, United Kingdom

21 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Woodbridge, Canada

29 Jul, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, London, United Kingdom

23 Jun, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, கொழும்பு, London, United Kingdom

24 Jul, 2015
20ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

25 Jul, 2005
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, காரைநகர் களபூமி, கொழும்பு, கனடா, Canada

24 Jun, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்கேணி, Bunde, Germany

24 Jul, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், உருத்திரபுரம்

23 Jul, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Zürich, Switzerland

24 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், Bowmanville, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Toronto, Canada, Mulhouse, France

02 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, அராலி வடக்கு, யாழ்ப்பாணம், helsinki, Finland

20 Jul, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada

20 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, யாழ் கொட்டடி சீனிவாசகம் வீதி, Jaffna, Northwood, United Kingdom

24 Jul, 2022
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, வெள்ளவத்தை

21 Jul, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024