அடுத்த மாதம் உச்சத்தை எட்டவுள்ள பணவீக்கம்! மத்திய வங்கியின் ஆளுநர் தகவல்
இலங்கையின் பணவீக்கமானது செப்டெம்பர் மாதத்தில் உச்சத்தை எட்டவுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கியில் உள்ள கேட்போர்கூடத்தில் இன்று (18)இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், இந்த பணவீக்கமானது மின் கட்டண மாற்றங்களால் படிப்படியான உயர்வு இருக்கும் என்றும் முன்னர் அறிவித்தது போல பணவீக்கம் 70% அளவை எட்டாது என்று குறிப்பிட்டார்.
முன்னோக்கிச் செல்ல கூடிய பணவீக்கம்

மேலும், இலங்கை மத்திய வங்கி 2022 ஆம் ஆண்டிற்கான பணவீக்கத்தின் வேகம் எதிர்பார்த்ததை விட வேகமாக மிதமானதாக இருக்கும் என அதன் நாணயக் கொள்கை மீளாய்வு கூறியுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, உலகளாவிய உணவு மற்றும் பிற பொருட்களின் விலைகளில் எதிர்பார்க்கப்படும் இயல்புநிலை புள்ளியியல் அடிப்படை விளைவு , உள்நாட்டு விநியோக நிலைமைகளில் எதிர்பார்க்கப்படும் மேம்பாடுகள் ஆகியவற்றின் விளைவாக மொத்த தேவை அழுத்தங்கள் தலையீட்டு பணவீக்கம் முன்னோக்கிச் செல்ல கூடியதாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், செப்டெம்பர் மாதத்தில் உச்சத்தை எட்டவுள்ள பணவீக்கமானது அடுத்தடுத்த மாதங்களில் அது குறைவடையும் எனவும் நந்தலால் வீரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.