வன்முறைக் கும்பலால் யாழின் அரும்பெரும் பொக்கிசம் அழிக்கப்பட்ட நாள்!
யாழ்ப்பாணம் பொது நூலகம் தீயிட்டு எரிக்கப்பட்டதன் 41 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்றைய தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
யாழ் மாநகர சபையின் ஏற்பாட்டில் இன்று காலை 9.30 மணியளவில் யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் இந்த நினைவேந்தல் இடம்பெற்றது.
நினைவேந்தலின் போது, யாழ்ப்பாண பொது நூலகத்தை உருவாக்குவதற்கு காரணகர்த்தாவாக விளங்கிய செல்லப்பா மற்றும் யாழ்ப்பாணம் பொது நூலகம் எரியூட்டப்பட்டதை அறிந்து உயிரிழந்த தாவீது அடிகளாருக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
நினைவேந்தல்
இந்த நினைவேந்தலின் போது யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் யாழ் மாநகர பிரதி முதல்வர் து.ஈசன் யாழ் மாநகர ஆணையாளர் ஜெயசீலன், யாழ்ப்பாணப் பொது நூலக பிரதம நூலகர், யாழ் மாநகர சபை உறுப்பினர்கள் வாசகர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
தீயிடப்பட்ட நூலகம்
யாழ்ப்பாண பொதுநூலகம்1981 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1ஆம் திகதி வன்முறைக் குழுவொன்றினால் தீயூட்டப்பட்டது.
நூலகம் எரிக்கப்பட்ட காலத்தில், அங்கு சுமார் 97,000 அரிய நூல்கள் இருந்ததுடன், தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகவும் திகழ்ந்தது.