இரவுவேளை கடத்திச் செல்லப்பட்ட யுவதி - காவல்துறை விசாரணையில் வெளியான பின்னணி!
அளுத்கமை, மொரகொல்ல பிரதேசத்தில் இளம் பெண் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்றிரவு நடந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
அளுத்கமை, மொரகொல்ல பிரதேசத்தில் 23 வயதான யுவதியை, இருவர் காரில் கடத்திச் சென்று வீடொன்றில் தடுத்து வைத்திருந்துள்ளனர்.
அதனையடுத்து சந்தேக நபர்கள் இரண்டு பேரையும் தாம் கைது செய்துள்ளதாக அளுத்கமை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
யுவதி கடத்தல்
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள், அளுத்கமை மற்றும் மொரகொல்ல ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கடத்திச் செல்லப்பட்ட யுவதி தென்னஹேன யக்வத்த பிரதேசத்தில் வீடொன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போதே காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
அதனையடுத்து மீட்கப்பட்ட யுவதி சினவத்த வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காதல் தோல்வியால் ஏற்பட்ட மன வருத்தம் காரணமாக சந்தேக நபர்கள் யுவதியை கடத்திச் சென்றுள்ளனர் என காவல்துறையின் ஆரம்பக் கட்ட விசாரணையின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் கைது
கடத்தல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.
சம்பவம் தொடர்பாக அளுத்கம காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
