நாட்டு மக்களுக்கு அரசாங்கத்தின் மகிழ்ச்சி தகவல்
இலங்கையின் அனைத்து துறைகளிலும் உள்ள தொழிலாளர்களினதும், அடிப்படை சம்பளத்தை ரூ. 27,000 ஆகவும், அடிப்படை தினசரி சம்பளத்தை ரூ. 1,800 ஆகவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பானது, அரசாங்கத்தினால் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் 2025 டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை குறைந்த பட்ச அடிப்படை சம்பளத்தை ரூ. 9,500 ஆகவும், குறைந்தபட்ச தினசரி சம்பளத்தை ரூ. 380 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
2026 இல் சம்பளம்
அத்துடன், 2026 ஜனவரி முதலாம் திகதியில் இருந்து அடிப்படை சம்பளத்தை ரூ. 3,000 ஆகவும், அடிப்படை தினசரி சம்பளத்தை ரூ. 120 ஆகவும் அதிகரிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஜனவரியில் இருந்து எந்தவொரு தொழில் அல்லது சேவையிலும் உள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் அடிப்படை சம்பளம் ரூ. 30,000 ஆகவும், அடிப்படை தினசரி சம்பளம் ரூ. 1,920 ஆகவும் அதிகரிக்கப்படும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
