ரணிலின் கருத்து நீரிழிவு நோயாளிக்கு அதிக சீனியை வழங்குவது போன்றது!
நாட்டில் அரச செலவினங்களுக்காக அதிகளவில் பணத்தை அச்சிடுவது, நீரிழிவு நோயாளிக்கு அதிக சீனியை வழங்குவது போன்றது என மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் மாதங்களில் சம்பளம் மற்றும் ஓய்வுதீயம் போன்ற அரச செலவினங்களிற்காக பணத்தை அச்சிட வேண்டியிருக்கும் என சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரம சிங்க தொடர்ச்சியாக தெரிவித்து வருவது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் கலாநிதி டபில்யூ விஜயவர்த்தன இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
பணம் அச்சிடல்
இலங்கை டிரில்லியன் ரூபாய்களை அச்சிடவேண்டியிருக்கும் என பிரதமர் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டி, பொருளாதார நிலையை ஸ்திரப்படுத்துவதற்கு மத்திய வங்கி எடுத்துள்ள நடவடிக்கைகளிற்கு இது பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் நாணய சட்டம்மூலம் வழங்கப்பட்டு உறுதி செய்யப்பட்ட மத்திய வங்கியின் சுயாதீன தன்மைக்கு இது பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.