இலங்கையில் சிறுவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்
2024 ஆம் ஆண்டில் 200க்கும் மேற்பட்ட சிறுவர்கள் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்து கொண்டமை தொடர்பான வழக்குகள் பதிவாகியுள்ளன என்று இலங்கை சமூக மருத்துவர்கள் கல்லூரி (CCPSL) தெரிவித்துள்ளது.
இலங்கை சமூக மருத்துவர்கள் கல்லூரி(CCPSL) தலைவர், ஆலோசகர், சமூக மருத்துவர், வைத்தியர் கபில ஜெயரத்ன(Kapila Jayaratne), 2022 ஆம் ஆண்டில், 18 வயதுக்குட்பட்ட 133 சிறுவர்கள் தவறான முடிவெடுத்து இறந்ததாகவும், அதிகாரபூர்வமற்ற தரவுகள் 2023 இல் 270 ஆக அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
சமூக ஊடக பயன்பாடு
"இந்த சம்பவங்களுக்குப் பின்னால் பல காரணங்கள் உள்ளன. ஒரு சாத்தியமான தலையீடு சமூக ஊடக பயன்பாட்டை ஏதேனும் ஒரு வடிவத்தில் கட்டுப்படுத்துவதாக இருக்கலாம். சமூக ஊடக பயன்பாடு தொடர்பான சாத்தியமான நடவடிக்கைகள் குறித்த தகவல்களை நாங்கள் சேகரித்துள்ளோம், மேலும் அடுத்த வாரம் அல்லது இரண்டு வாரங்களுக்குள் கூடுதல் விவரங்களை வெளியிட திட்டமிட்டுள்ளோம்," என்று அவர் கூறினார்.
சமூக ஊடக பயன்பாட்டில் சிறுவர்கள்
சமூக ஊடகங்கள் நன்மைகள் மற்றும் அபாயங்கள் இரண்டையும் கொண்டு வந்தாலும், தற்போது சிறுவர்களிடையே அதன் பயன்பாட்டை சிறப்பாக ஒழுங்குபடுத்தவும் அதன் தீங்கு விளைவிக்கும் விளைவுகளை குறைக்கவும் உதவும் பரிந்துரைகளில் செயல்பட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
