வீதியில் கிடந்த சிசுவின் சடலம் – சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை!
லிந்துலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் சிசு ஒன்றில் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டம்- லிந்துலை பகுதி நாகசேனை சிங்கள வித்தியாலயத்துக்கு அருகிலிருந்து நாகசேனை வலகா தோட்டத்திற்கு செல்லும் வீதியின் ஓரத்திலேயே சிசுவின் சடலம் மீட்டகப்பட்டுள்ளது.
இன்றைய தினம் காலையில் மீட்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
வீதியில் சிசுவின் சடலம்
வீதி ஓரத்தில் சிசுவின் சடலம் கிடப்பதை அவதானித்த சிலர் லிந்துலை காவல் நிலையத்திற்கு வழங்கிய தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சடலத்தினை மீட்டுள்ளனர்.
சிசு யாருடையது என இதுவரை அடையாளம் காணப்படவில்லை. சுமார் 6 மாதம் நிறைவடைந்த சிசுவொன்றின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
விசாரணை
நுவரெலியா மாவட்ட நீதவானின் விசாரணைகளின் பின் பிரேத பரிசோதனைக்காக சிசுவின் சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை லிந்துலை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.







