சிறிலங்கா அரசாங்கம் கவிழும் அபாயம் - ஆளும் கட்சிக்குள்ளிருந்தே குறிக்கப்பட்டது திகதி!
சிறிலங்கா அரசாங்கம் கவிழும் வாய்ப்பு உள்ளதாக பொதுஜன பெரமுன கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.
அதனடிபப்டையில், நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ள வரவு செலவு திட்டத்திற்கு அரசாங்கத்தின் ஒரு சிறிய பகுதியினரேனும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கினால், வரவு செலவுத் திட்டம் நிச்சயமாக தோற்கடிக்கப்படும் என்றும் அதனால் அரசாங்கம் கவிழ்க்கப்படலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே பேராசிரியர் சன்ன ஜயசுமண இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
22 ஆம் திருத்தத்திற்கு வாக்களிக்காத ஆளும்கட்சி உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பில் எதிராக வாக்களிக்கும் சாத்தியக்கூறுகள் அதிகம் என்றும் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தை கலைக்கும் சந்தர்ப்பம்
அவ்வாறான நிலையில் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டு, அரசாங்கத்தைக் கலைக்க வற்புறுத்துவதற்கான சந்தர்ப்பம் உருவாக்கப்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆகவே எதிர்வரும் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்படுமாயின் அரசாங்கம் கவிழும் அபாயம் காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.