அடாவடியில் ஈடுபட்ட பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் - தற்போது வெளியாகியுள்ள தகவல்!
Sri Lanka Police
Sri Lanka Politician
Sri Lanka
Sri Lanka Podujana Peramuna
Sri Lanka Police Investigation
By Kalaimathy
இரண்டாம் இணைப்பு
பொதுஜன பெரமுனவின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லலித் வர்ணகுமார என்பவரே ஹொரணை அங்குருவாதொட்ட தொம்பகொட இராணுவ முகம் சந்தியில் உள்ள வீடொன்றின் மீது துப்பாக்கி பிரயோகம் செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளதாக அங்குருவாதொட்ட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வீட்டு உரிமையாளர் தனது தாயின் மூன்றாம் மாத நினைவு நாளை முன்னிட்டு நேற்றைய தினம் இரவு நடத்திய புண்ணியதானத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினரை அழைத்துள்ளார்.
இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் இரவு 11 மணியளவில் அதில் கலந்து கொண்டுள்ளார்.
அதன் பின்னர் அந்த வீட்டில் இருந்த சிலருக்கும் நாடாளுமன்ற உறுப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதத்தால் இடம்பெற்ற துப்பாக்கி சூடு
அதனையடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களுடன் சமாதானம் செய்து கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர் திரும்பிச் சென்றுள்ளார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை மீண்டும் அங்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் தனது வாகனத்தில் இருந்தவாறு வீட்டை நோக்கியும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தை நோக்கியும் மூன்று முறை துப்பாக்கி பிரயோகம் செய்துள்ளதாக காவல்துறையினருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.
அதேவேளை சம்பவம் நடந்த இடத்தில் இருந்து காவல்துறையினர் இரண்டு வெற்று தோட்டாக்களையும் கைப்பற்றியுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளனர்.
பாணந்துறை சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரின் உத்தரவின் பேரில் அங்குருவாதொட்ட காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
முதலாம் இணைப்பு
பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், மற்றுமொரு அரசியல்வாதியின் ஆதரவாளரின் வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதோடு, தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஹொரணை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நடைபெற்ற சமய நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள சென்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கும், களுத்துறை மாவட்டத்தை சேர்ந்த பொதுஜன பெரமுனவின் பிரபல அரசியல்வாதி ஒருவரின் ஆதரவாளருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
தப்பி ஓடிய நாடாளுமன்ற உறுப்பினர்
இதன் போது நாடாளுமன்ற உறுப்பினர், வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் செய்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இது தொடர்பாக வீட்டின் உரிமையாளர் காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
எனினும் இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் எவருக்கும் எந்த பாதிப்பு ஏற்படவில்லை என தெரியவருகிறது.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி