காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் - நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்திய கூட்டமைப்பு
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஆரம்பித்த போராட்டம் இன்று 2000 நாட்களை எட்டியுள்ள நிலையில், நாடாளுமன்றத்தின் இன்றைய அமர்வின்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதாகைகளை ஏந்தி தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.
இதன்போது நாடாளுமன்ற ஒளிப்பதிவு சிறிது நேரம் நிறுத்தப்பட்டிருந்தது.
2000 நாட்களை எட்டியுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்துக்கு தமது ஆதரவை தெரிவிப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தெரிவித்தார்.
காணாமலாக்கப்பட்டவர்களுக்கு நீதிகோரி போராட்டம்
நாடாளுமன்றத்தின் இன்றைய அமர்வின்போது உரையாற்றிய அவர், '2000 ஆவது நாள் காணாமலாக்கப்பட்டவர்களுக்கு நீதிகோரி போராட்டம்' என்று எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு தனது கருத்துக்களை வெளியிட்டார்.
அதனைத் தொடர்ந்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதாதைகளை ஏந்தி தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.
இதன்போது நாடாளுமன்ற ஒளிபரப்பு கருவி அவர்களை ஒளிப்பதிவு செய்யாது சபாநாயகரின் பக்கம் திருப்பப்பட்டது.
சிறுபான்மையின உரிமைகள் மறுப்பு
இதனைச் சுட்டிக்காட்டி தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இதற்கு எதிர்ப்பை வெளிட்டதுடன், சிறுபான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகள் மறுக்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.
தமிழர் தாயகப் பகுதியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி மாபெரும் போராட்டம்! |