அஜித் ரோஹண உள்ளிட்ட மூன்று உயர் அதிகாரிகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை!
சிறிலங்கா காவல்துறை உயர் அதிகாரிகள் மூவர் இடமாற்றம் செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் பொதுச் சேவை ஆணைக்குழுவின் சேவைத்தேவையின் அடிப்படையில், பொதுச் சேவை ஆணைக்குழுவினால் இந்த இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய இலங்கையின் குற்றவியல் மற்றும் போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண உட்பட மூன்று சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இடமாற்றம் செய்யப்பட்டதன் அடிப்படையில், அஜித் ரோஹன தென் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபராகவும், தென் மாகாணத்தில் இருந்து எம்.டி.ஆர்.எஸ் தமிந்த கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கிழக்கு மாகாண காவல்துறை அதிகாரி கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபராக கடமையாற்றிய சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் எல்.கே.டபிள்யூ.கே சில்வா, குற்ற மற்றும் போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
