போராட்டங்கள் ஓயப்போவதில்லை! ரணிலுக்கு கடுமையான எச்சரிக்கை
நாட்டு மக்களின் எண்ணங்களுக்கு மதிப்பளித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயற்படவேண்டும் என்று கிண்ணியா நகர சபை உறுப்பினர் எம். எம். மஹ்தி தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசியல் நெருக்கடி தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நாட்டில் நிலவிவரும் பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுத்த எவர் அதிபராக தெரிவுசெய்யப்பட்டாலும் போராட்டங்கள் ஓயப்போவதில்லை.
மக்களின் எதிர்பார்ப்பு
மக்கள் போராட்டத்திற்கு எதிராக ரணில் விக்ரமசிங்கவை அதிபராக தெரிவுசெய்வதற்கு துணை நிற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டக்காரர்களினதும் நாட்டு மக்களினதும் மன உளச்சலுக்கு உள்ளாக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்.
எனவே இந்த நாட்டையும் நாட்டு மக்களையும் பேரழிவுகளில் இருந்தும் உயிரிழப்புகளிலிருந்தும் பாதுகாப்பு செய்பவராக இருந்தால் போராட்டக்காரரினதும் மக்களினதும் எதிர்பார்ப்புகளை பிரதிபலிக்கும் ஒருவர் அதிபராக தெரிவுசெய்யப்பட வேண்டும் எனவும் உருக்காமாக கேட்டுக்கொள்கின்றேன் என்று அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.